Tuesday, 31 August 2010

pinnoottam 31 08 2010

http://smuthukumaran.wordpress.com/2010/08/29/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95/#comment-35

பலவற்றில் முன்னேறி உள்ள தமிழகம் இந்த விஷயத்தில் இரண்டு நூற்றாண்டுகள் பின் தங்கி இருப்பது வருத்தம் அளிக்கிறது.
நான் ஐம்பதுகளிலே, அறுபதுகளிலே பள்ளி, கல்லூரியில் தென் தமிழ் நாட்டில் படித்தவன். அப்போது சாதி பெயரில் இருக்கக் கூடாது; பொது இடத்தில் சாதியைப் பற்றி பேசக் கூடாது; பேசினால் அவமானம் எனக் கருதப்பட்ட காலம். பள்ளியிலே உடன் பயிலும் மாணவனின் சாதி எது என அறிய முற்பட்டால் கேவலம் எனக் கருதிய காலம். ஓரளவு தமிழில் பேசும் பொது கூட குழூஉக்குறி தவிர்த்து சமச்சீர் மொழியில் பேச முயன்ற காலம். கலப்பு திருமணங்கள் சமுதாயத்தில் தலையெடுத்த காலம். அதை எல்லாம் பார்த்து நாங்கள் சில பத்தாண்டுகளிலே சாதி அறவே போய் விடும் என நினைத்த காலம். அப்படியே போகா விட்டாலும், உயர்வு/தாழ்வு என நினைக்க , பேசப் பட மாட்டாது என எண்ணிய காலம்.
ஐயகோ! இப்படி அடைந்திருந்த முன்னேற்றம் மறைந்து இப்போது நாற்பது ஆண்டுகளில் இருநூறு ஆண்டுகள் பின்னேறி இருக்கிறோம்.

தமிழ் சமூகத்திலே நடு நிலையில் நின்று சிந்திக்கிறவர்கள் இந்த சமீப கால நிகழ்வுகளை சீர் தூக்கி பார்த்து, இவ்வாறு ஆனதற்கு காரணங்கள் என, ஒவ்வொரு பகுதியும் ( sections of the society) எந்த விதத்தில் இதற்கு வினை ஊக்கிகளாக இருந்திருக்கிறது , இதை மாற்ற ஒவ்வொரு பகுதியும்/குழுவும் /கூட்டமும் என்ன செய்ய வேண்டும் என கலந்து உரையாட வேண்டும். அரசியல் வாதிகளை கூடியவரை தவிர்த்தல் வேண்டும்.
இந்த பின்னூட்டம் நீண்டு விட்டது. காண்பவர்கள் கருத்து கூறவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

Thursday, 26 August 2010

ஆகஸ்ட் 26, 2010

http://vikatandiary.blogspot.com/2010/08/blog-post_25.html
தமிழில் எழுதுவதிலும், உச்சச்சரிப்பிலும் உள்ள குறைகளை கண்டு அதைப் பற்றி நினைக்கும், பேசும், எழுதும் நபர்கள் இன்னும் இருக்கிறார்கள் என அறிய மகிழ்ச்சி .
தொலைக் காட்சியில் தமிழ் சித்திரவதை செய்யப் படுவது கண்டு தினம் தினம் மனம் வெதும்புபவன் நான். ஒரு முறை தமிழ் திரைப் படம் ஒன்று ஒளி பரப்பாகிக் கொண்டு இருந்தது. கால் மணிக்கு ஒரு முறை ஒரு பெண்மணி " இந்த திரைப்படத்தை "வழங்கியவர்கல் " அல்லது "வளங்கியவர்கல்" என திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டு இருந்ததால் படம் காண்பதையே நிறுத்திவிட்டேன். செய்தி அறிக்கை எழுதுபவர்களுக்கு ஒருமை/பன்மை வேறுபாடு மறந்து விட்டதோ என அடிக்கடி தோன்றும். உ-ம: சட்ட அவையில் வினாக்கள் "எழுப்பப்பட்டன " என்றில்லாமல் "எழுப்பப்பட்டது ".
ஒரு காலத்தில், அதாவது வானொலி மட்டுமே இருந்த காலத்தில், பேட்டி அளிப்பவர் தமிழ் உச்சரிப்பில் தவறு செய்வார்; ஆனால் கேட்பவர் சரியாக உச்சரிப்பார். இப்போது கேட்பவர்கள் கூட உச்சரிப்பை ஒரு பொருட்டாக மதிக்காதவர்களாக இருப்பது மோசம்.
தொலைக் காட்சி நிலையத்தினர் குறைந்த பட்சம் செய்தி அறிக்கைகளை சரி பார்க்க தமிழ் அறிஞர்களை நியமிக்க வேண்டும். மேலும், அவர்கள் அலையில் வரும் நிகழ்ச்சிகளை ஒரு தமிழ் அறிஞர் தொடர்ந்து பார்க்க வேண்டும். தமிழில் தவறு செய்பவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீண்டும் வாய்ப்பு பெறா வண்ணம் செய்ய வேண்டும்.