Monday, 22 April 2013

https://othisaivu.wordpress.com/2013/04/20/post-196/#comment-791


அல்லா டீச்சருங்ளயும் நிக்கவச்சி சுட்ணும் சார்!

20/04/201


உங்கள் கட்டுரையில் பெரும்பாலவற்றை வழி மொழிகிறேன். 
சென்னையில் ஆசிரியர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்து, சமூக ஆர்வலர்களை வகுப்பு எடுக்க அனுமதிப்பர்  என்றால் வகுப்பு எடுக்கத் தயாராக இருக்கிறேன். நான் தமிழ் மீடியத்தில் தமிழ்நாட்டில் B Sc படித்தவன். பணியில் இருந்து ஒய்வு பெற்று பொழுதை நல்ல வழியில் செலவிட விரும்பும் சாமானியன்.  (2) மாலை நேரங்களில் இலவச பயிற்சி வகுப்புக்கள் எடுக்கவும் தயார்.  இந்த வலையின் வாசகர்கள் எழுதுக. இ-மெயில்: nerkuppai.thumbi@gmail.com 

Tuesday, 2 April 2013



TUESDAY, APRIL 02, 2013

மாணவர் போராட்டம்




http://www.badriseshadri.in/2013/04/blog-post.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+badriseshadri%2FqJsz+%28%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%29


ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் அரசியல் உணர்வு/உரையாடல்கள்/விவாதம்/போராட்டம் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம்.  அதே விதத்தில் தமிழகத்திலும் மாணவர்களின் அணுகுமுறை இருக்குமானால் பிரச்னை இல்லை.  மாறாக பத்ரி சொல்லியிருப்பது போல், அது வரவேற்கப்படவேண்டியதே.  ஆனால்,  இது வரை தமிழகத்து கல்லூரிகளில், குறிப்பாக சட்டக் கல்லூரி மாணவர்களின் அணுகுமுறை ஒரு வழிப் பாதையாகவும் மாறுபட்ட எண்ணங்களை செவி மடுத்து, புரிந்துகொண்டு, தர்க்கரீதியாக சரியானவற்றை ஒப்புக்கொண்டு, தம் அடிப்படை அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ளத் தேவையான மனநிலையைக் கொண்டதாக ஒருபோதும் காட்டிக்கொண்டதில்லை. எதிர்க் கருத்து சொல்பவர்களை கருங்காலிகள், கைக்கூலிகள் என்று வசை பாடி, வன்முறை காட்டி (அமிலம் வீசுவதும் உண்டு) அவர்களின் வாய் மூடுவதே அதிகம் கண்டிருக்கிறோம்.