http://vikatandiary.blogspot.com/2010/08/blog-post_25.html
தமிழில் எழுதுவதிலும், உச்சச்சரிப்பிலும் உள்ள குறைகளை கண்டு அதைப் பற்றி நினைக்கும், பேசும், எழுதும் நபர்கள் இன்னும் இருக்கிறார்கள் என அறிய மகிழ்ச்சி .
தொலைக் காட்சியில் தமிழ் சித்திரவதை செய்யப் படுவது கண்டு தினம் தினம் மனம் வெதும்புபவன் நான். ஒரு முறை தமிழ் திரைப் படம் ஒன்று ஒளி பரப்பாகிக் கொண்டு இருந்தது. கால் மணிக்கு ஒரு முறை ஒரு பெண்மணி " இந்த திரைப்படத்தை "வழங்கியவர்கல் " அல்லது "வளங்கியவர்கல்" என திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டு இருந்ததால் படம் காண்பதையே நிறுத்திவிட்டேன். செய்தி அறிக்கை எழுதுபவர்களுக்கு ஒருமை/பன்மை வேறுபாடு மறந்து விட்டதோ என அடிக்கடி தோன்றும். உ-ம: சட்ட அவையில் வினாக்கள் "எழுப்பப்பட்டன " என்றில்லாமல் "எழுப்பப்பட்டது ".
ஒரு காலத்தில், அதாவது வானொலி மட்டுமே இருந்த காலத்தில், பேட்டி அளிப்பவர் தமிழ் உச்சரிப்பில் தவறு செய்வார்; ஆனால் கேட்பவர் சரியாக உச்சரிப்பார். இப்போது கேட்பவர்கள் கூட உச்சரிப்பை ஒரு பொருட்டாக மதிக்காதவர்களாக இருப்பது மோசம்.
தொலைக் காட்சி நிலையத்தினர் குறைந்த பட்சம் செய்தி அறிக்கைகளை சரி பார்க்க தமிழ் அறிஞர்களை நியமிக்க வேண்டும். மேலும், அவர்கள் அலையில் வரும் நிகழ்ச்சிகளை ஒரு தமிழ் அறிஞர் தொடர்ந்து பார்க்க வேண்டும். தமிழில் தவறு செய்பவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீண்டும் வாய்ப்பு பெறா வண்ணம் செய்ய வேண்டும்.
Thursday, 26 August 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment