Sunday, 6 February 2011

06/02/2011



நல்ல பதிவு.
2-G ஸ்பெக்ட்ரம் குறித்து வேறு வேறான கோணங்களில் நோக்கி பதிவு இடுகிறார்கள்.
இதில் ஊழல் நடந்தது என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
இதில் ஊழல் இல்லை; அரசுக்கு நஷ்டம் எதுவும் இல்லை; லாபமே! என்று கபில் சிபல் கூறுவதும், திராவிட முன்னேற்ற கழகம் கூட்டங்கள் போட்டு முழங்குவதும் ஏமாற்றுவதற்கு ஒரு அளவே இல்லையா? எனவே நினைக்கத் தோன்றுகிறது.

ஒரே பின்னூட்டம் என்னை மேலும் வருத்தப் படச் செய்கிறது.
அவருக்கு: ஐயா! 2-G முதல் ஊழல் அல்ல ; இது போல் பல ஆயிரம் ஊழல்கள் கடந்து போய் இருகின்றன; நம்மை சுரண்டி இருக்கிறார்கள்.
அதில் அம்மாவும் அடக்கம்.
சில ஆர்வலர்களால் , (உரிமை பெறாத கம்பனிகள் கூட இதைச் செய்து இருக்கலாம்; தாம் கொள்ளையில் பங்கு பெறவில்லையே, என நினைத்து) சில உண்மைகள் கசிந்து, ஒரு blogger (திரு கோபாலக்ருஷ்ணன், மலையாள நிரூபர்), சுப்ரமண்யம் சுவாமி, மற்றும் பலர் வெவ்வேறு விதங்களில் உண்மைகளை நீதி மன்றங்கள் மூலமாகவும், வேறு வழிகளிலும் தகவல்களை பொது மக்கள் பார்வைக்கு கொண்டு வந்தனர்;
இந்த சூழ்நிலை பல ஆயிரம் ஊழல்களுக்கு அமையவில்லை;
இந்த ஊழல் ஏற்படுத்திய தாக்கத்தைக் கண்டு, வருங்காலத்தில் மேலும் பல ஊழல்கள் வெளி வரவும், அந்த பயத்தில் ஊழல்கள் குறையவும் கூடும் என சாதாரண மக்கள் நம்பிக்கை பெற வழி உண்டு.
அம்மா செய்த ஊழல்களும் வெளி வரும். அவரும் மீண்டும் ஆட்சியைப் பிடித்தாலும், மீண்டும் இழக்கக் கூடும் தான்.
ஒரு கொலைகாரனை தூக்கில் போட முயலும் பொது, பல கொலைகள் நடந்தன; அவற்றில் கொலைகாரகலூகு தண்டனை தரவில்லை; என்பது என்ன விதத்தில் நியாயம்?http://mahamuthu.blogspot.com/2011/02/blog-post.html

ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய ஒரு விரிவான அலசல்.

No comments:

Post a Comment