நல்ல பதிவு. தமிழ்ப் பற்று உள்ளவர்களே தமிழை வளர்க்கவும், குறைந்தது நலிந்து கோளாமல் இருக்கவும் முயல்வார்கள் எனலாம்.
தமிழ்ப் பற்று என்பது தமிழை பயிற்று மொழியாக உயர்நிலைப்பள்ளி வரை படித்தவர்களுக்கே இருப்பதைக் காண முடிகிறது. எழுபதுகளுக்குப்பின், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அதிகமாகி, ஆங்கில பயிற்று மொழியில் கற்பவர்களே மிக அதிகம் ஆகிவிட்டனர். இவர்களில் பெரும்பாலோனார் முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலத்தை பயிற்று மொழியாகக் கொண்டவர்கள். இவர்களைப் பொறுத்தவரை வீட்டிற்குள் அதுவும் தாயிடம் பேசுவது மட்டுமே தமிழாக இருக்கிறது என நினைக்கிறேன். அவர்கள் சிந்திப்பது பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் நினைக்கிறேன். எண்பதுகளில், தொண்ணூறுகளில் பள்ளி பயின்றோர் இது குறித்து கருத்து தெரிவித்தால் நன்றி உடையனவனாக இருப்பேன். http://valaakam.blogspot.com/2011/02/blog-post.html
Sunday, 13 February 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment