Thursday, 26 January 2012

பொழுது எப்படி போகுதுங்க?

http://swamysmusings.blogspot.com/2012/01/blog-post_25.html

சிந்திக்க வைத்த பதிவு.
மிக விரைவிலே ஒய்வு பெறப் போகும் நான் இந்த பதிவின் மையக் கருவான " எப்படி பொழுது போகிறது ?" என்று பலரை கேட்டிருக்கிறேன்.
அவர்கள் குறிப்பாக பொதுப்பணி ஆற்றவில்லை என்றால் சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லாமல் கொஞ்சம் சலிப்படைவது உண்டு. ஆனால், அவர்களுக்கு நம்மால் ஆனா வரை பொதுப்பணி ஆற்றி நேரத்தை ஓரளவு நல்ல விதத்தில் செலவு செய்யலாமே என்று சுட்டிக் காடியிருக்கிறேன். நாம் என்ன கூவத்தை மணம் வீசச் செய்ய முடியுமா என்று கேட்போர் உண்டு.
தொடர்ந்த உரையாடலில், ஒவ்வொரு நபரும் தன அளவுக்கு சிறு பணிகள் செய்ய இயலும்; உங்கள் வீட்டில் பத்து பாத்திரம் தேய்க்கும் பெண்மணியின் குழந்தைகளுக்கு இலவசமாக் பாடம் கற்பிக்கலாமே? நீங்கள் மாநகராட்சியில் பணி செய்தவர் என்றால், வீட்டு வரி செலுத்துவது, சிறு கடை வைக்க எந்தவிதம் உரிமம் வாங்க வேண்டும் என்று சொல்லி உதவி செய்யலாமே, நாம் தான் வேலை செய்யும் காலங்களில் என்பது-தொண்ணூறு சதவீதம் தான் வேலை செய்துவிட்டு , இப்போது ஓய்வூதியம் பெறுகிறோமே; என்பது போன்று பாங்காக சொல்லி, அவர்களை சிந்திக்க வைத்து இருக்கிறேன்.
ஒருவர் சுமார் மூன்று மாதங்களுக்குப் பின் என்னைக் காண வந்தார்; இப்போது நான்கு சிறுவர்களுக்கு பாடம் சொல்லித் தருகிறேன்; அவர்களில் இரண்டு பேரின் கல்விச் செலவை முழுதுமாக ஏற்றுக்கொண்டிருக்கிறேன்; இப்போது மனம் மிக நல்ல நிலையில் உள்ளது; இரத்த அழுத்தம் குறைந்து மகிழ்ச்சியாக உள்ளேன்; உங்கள் அறிவுரைக்கு நன்றி என்று சொல்லிச் சென்றார்.
இந்த பின்னூட்டத்தை பின்னர் தான் பார்த்தேன். என் பின்னூட்டம் இந்தக் குறையைத் தீர்த்திருக்கும் என நினைக்கிறேன்.

No comments:

Post a Comment