Saturday, 25 December 2010

25/12/2010

http://oosssai.blogspot.com/2010/12/2.html

சிறு வேலைகளுக்கு வெளி மாநிலத்தவர் தமிழகம் வருகின்றனர் என்றால் ஒன்று: குறைந்த கூலியில் வேலை செய்ய தமிழகத்தில் ஆட்கள் கிடைக்கவில்லை என்று தானே அர்த்தம்? கேரளத்திலிருந்து தச்சர்களும், பெயிண்டர்களும், சிற்றுந்து ஓட்டிகளும் வளைகுடா நாடுகள் சென்றதால் அவ்வேளைகளுக்கு தமிழகத்தில் இருந்து வரவழைக்கப் பட்டார்கள் என படித்திருக்கிறேன். (சமீப காலமாக உணவு விடுதிகளில் சாப்பிட்ட தட்டு எடுக்கும் வேலைகளுக்கு ஆண்கள் கிடைக்காததினால் பெண்களை அமர்த்தி இருப்பது கண்டு ஒரு விதத்தில் மகிழ்ச்சியே அடைந்தேன்); பீகாரிகள் சிறிய வேலைகளுக்கு வருவதும் இப்படித் தான் என எண்ணிக் கொண்டிருக்கிறேன். இங்கு வேலைக்கு வர ஆள் இருந்தும், தம் மாநிலத்தவர் என்பதால் அங்கிருந்து வரவழைத்தால் சரியில்லை தான்.

பின்னூட்டத்தில் உண்மையான நிலை என்ன என்று அன்பர்கள் எழுதுவார்கள் என நம்புகிறேன்.

Friday, 24 December 2010

25/12/2010

http://krpsenthil.blogspot.com/2010/12/blog-post_22.html

பலருடைய உள்ளக் கிடக்கை. விவசாயம் குறித்து ஏதாவதொரு செய்தியைப் பார்த்தபின் அல்லது ஒரு விவசாயியின் தற்கொலை, கிராமம் பாழ் ஆகிறது என்று ஒரு திரைப்படம் பார்க்கும் பொது வருவது : நாமும் கிராமம் சென்று விவசாயத்தை நல்ல முறையில் செய்து நாட்டு முன்னேற்றத்துக்கு நம் பங்கு ஆற்ற வேண்டும் என்று தோன்றும் ஒரு நினைவுக்கீற்று.
செயல் படுத்த முனைவோர் சிலரே. அவர்கள் முயற்சி வெற்றி அடைந்ததா என தகவல் இல்லை. பின்னோட்டம் இட்ட அன்பர் ssk, jayaprakashvel தங்கள் அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்கள்.
என்னைப் போல பலரும் ஆர்வமாக உள்ளோம். தயை கூர்ந்து, ஒரு பத்து ஏக்கர் நிலத்தை வாங்கி/லீசுக்கு எடுத்து நிர்வாகம் செய்ய தேவையான ஆட்கள் , பண முதலீடு, பயிர்கள் சாய்ஸ், பொருளாதார புள்ளிவிவரங்கள் எவரேனும் கொடுத்தால் குறைந்த பட்சம் பத்து பேர் சீரியஸாக இதை செயல் படுத்த கூடும்.

Monday, 6 December 2010

pinnoottam 7dec 2010:லஞ்சத்தை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்

http://site4any.wordpress.com/2010/11/21/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/#comment-22


நல்ல கருத்து.
லஞ்சம் கொடுப்பது சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் கொடுப்பதற்கு சில காரணங்கள்: ஒன்று: அவசரம் அவசியம். ; இரண்டு: சிரமப்படாமல் காரியம் சாதித்துக்கொள்ள வேண்டும் என்று சராசரி மனிதன் நினைப்பது; மூன்று: எளிதில் வெளி மனிதன் புரிந்து கொள்ள முடியாமலும், மேலும் அதற்கு செலுத்தவேண்டிய படிவங்கள் சரிவர விநியோகம் ஆகாமலும் பார்த்துக்கொள்ளும் அரசு ஊழியர்.
புது வாகனம் பதிவு செய்து கொள்ள போக்குவரத்து துறை அலுவலகம் சென்றால் அங்கு தேவையான படிவங்கள் இரா; விசாரணை கவுண்டர் என்று ஏதாவது இருக்குமா? புரோக்கர்கள் தான் எங்கும் நிறைந்து இருப்பர்.
பள்ளியில் லஞ்சம் கொடுக்கக் கூடாது, வாங்கக் கூடாது என கற்பிப்பது முக்கியம் தான். கூடவே, அரசு அலுவலங்களில், சராசரி நபர் செய்துகொள்ள வேண்டிய நடைமுறைகளை மாதிரி படிவத்துடன் செலுத்த வேண்டிய தொகை போன்ற விவரங்களுடன் கற்பிப்பது அவசியம். உதாரணம்: ராசன் கார்டு செய்து கொள்வது எப்படி? ஓட்டுனர் உரிமம் பெறுவது எப்படி? . முதலியன சொல்லிக் கொடுப்பது அவசியம்.
ஒரு சின்ன யோசனை: சராசரி மனிதனுக்கு வேண்டிய விவரங்களை ஒய்வு பெற்ற அரசு ஊழியரில் எவரேனும் கைப்ரதி வெளியிட்டால் உதவியாக இருக்கும். லஞ்ச ஒழிப்பு குழுக்கள் இதற்கு பண உதவி செய்ய வேண்டும்.










நெற்குப்பை தும்பி

pinnoottam: 6 dec 2010

http://nanduonorandu.blogspot.com/2010/12/blog-post_06.html
சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு ஐயா அம்பேத்கர் சொன்னதை பதிவு செய்ததற்கு நன்றி.
அதற்குப் பின் சென்ற ஆண்டுகளில் பலப்பல மாற்றங்கள் வந்துள்ளன.
ஐயாவின் எண்ணத் தாக்கத்தால் வந்த நல்ல மாற்றங்களை பதிவு செய்ய வேண்டும்; அவர் கருத்துக்கு மாறாக அரசுகள் நடவடிக்கை எடுத்ததனால் வந்த விளைவுகளை பதிக்க வேண்டும். இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டும். அரசியல் சட்டத்தில் ஒதுக்கீடு வந்ததற்கு மூல காரணமான அவர் நினைவு நாளில் அது எந்த அளவுக்கு சமூகத்தில் சமத்துவம் வர அல்லது சமத்துவம் நோக்கி நகர எந்த அளவுக்கு உதவி இருக்கிறது என்று பதிய வேண்டும்.
சனத்தொகை கணக்கெடுப்பு சாதி வாரியாக வந்தால் நடைமுறையில் உள்ள ஒதுக்கீடு முறையில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் எனவும் சிந்திக்க வழி செய்யும்.