Thursday, 14 April 2011

14/04/2011

http://tamilnattu.blogspot.com/2011/04/blog-post_1619.html
இலங்கை தமிழர்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை; ஏற்றத் தாழ்வு உண்டு என்று தெரியும் (பெரும்பாலனவர்க்கு தெரியாது). அதன் பரிமாணங்களை இவ்வளவு தெளிவாக யாரும் சொல்லவில்லை.
பல முறை பின்னூட்டங்களில் எழுதி உள்ளேன்: ஈழத் தமிழர்களுக்கு இலங்கையில் உள்ள பிற தமிழர்களிடையே ஆதரவு இல்லாத நிலையில் அவர்கள் இந்தியாவின் தமிழர்களை குறை சொல்வது சரியா? நெடுமாறன்களும், சீமான்களும், வைகோகளும் இது குறித்து தெளிவாக அறிந்து அவர்களுக்குளே ஒற்றுமையை ஏற்படுத்த எந்த வித முயற்சியையும் செய்யவில்லை. ஈழத் தமிழர்கள் என்பதும் இலங்கை தமிழர்கள் என்பதும் ஒன்றல்ல என்று சோ போன்றோர் சொன்னால் நாம் சீரணித் துக்கொள்வது இல்லை.
இரண்டு: அவர்களுக்கு நடுவே உள்ள சாதி வேறுபாடுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இங்கு தான் பார்ப்பனர்கள் கெடுத்தார்கள் என்று ஓயாமல் கத்துகிறோம். குமரிக்காண்டம் இருந்தபோது பார்ப்பனர்கள் இங்கு வரவே இல்லையே; அப்புறம் சாதி எங்கிருந்து வந்தது?
தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்ற உண்மையை ஒத்துக்கொள்வதற்கு பார்ப்பனர்களை இழுக்காதீர்கள்.

No comments:

Post a Comment