http://www.thamilnattu.com/2011/05/1.html
தமிழகத்து தமிழர்களுக்கு ஈழத்து பிரச்னைகள் தெரியாது, ஆனால் அவர்கள் இலங்கையில் சிங்களர் பெருவாரியான ஆட்சியின் கொடுமைகளை பேசுகிறார்கள் என்று பல முறை எண்ணியதுண்டு. ஈழம், மலை, கொழும்பு பிரிவுகள் பற்றியே ஓரளவு தெரியும். ஆனால் அங்கிருந்த சமூக பிரிவுகளைப் பற்றி படித்ததில்லை.
தமிழ் நாட்டுத் தமிழர்கள், அரசியல் கட்சிகளின் விடா முயற்சிகளையும் கடந்து சாதிப் பிரிவுகளை ஓரளவு குறைக்க வேண்டும், நீக்க வேண்டும் என்று சிந்திக்கிறார்கள். ஆனால், இலங்கையில் இந்த அளவுக்கு இருப்பது மிக வருத்தமாக இருக்கிறது. அன்னியர் (சிங்களவர் என்ற பொருளில்) அடக்கி வைத்துள்ளபோது, விடுதலைக்கு அல்லது தமிழர் உரிமைக்காக போராடும் காலத்தில் கூட இது போன்ற சமூக பிரிவுகள் மேலோங்கி நின்றது /நிற்பது அதிர்ச்சியே.
இது போன்ற பதிவுகளை, தமிழ் நாட்டு வலைஞர்கள் காணுவார்கள் என நம்புகிறேன்.
சாதி பிரிவு என்பது "வட நாட்டு பார்ப்பனர்கள் கொண்டு வந்த சகதி, சாதி பிரச்னைக்கு பார்ப்பனரே காரணம்" என்று இந்த நூற்றாண்டிலும் கத்திக் கொண்டிருக்கும் கலைஞர்களும் வலைஞர்களும் கண்டு, இங்குள்ள "பார்ப்பனர்" குறித்து தம் கண்ணோட்டத்தை
திருத்திக் கொள்வர் என நம்புகிறேன்.
Wednesday, 11 May 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment