Saturday, 14 May 2011

15/05/2011

http://www.inneram.com/2011032614903/vaikos-politics

பழைய பதிவு இப்போது தான் காண நேர்ந்தது.
தேர்தலுக்குப் பின் தி மு கவின் நிலை பரிதாபம். கலைஞரின் குடும்பச் சொத்து ஆனதின் விளைவு இப்போது கழக அனுதாபிகளுக்கு ( திமுகவை முதலாகவும், கலைஞரை அதற்கப்புறமும் நேசித்தவர்கள்) தவிப்பர். பெரிய மனது பண்ணி கலைஞர் ஓய்வே பெற்றுக் கொண்டாலும் ஸ்டாலினை நம்பி கழகத்தை ஒப்படைக்கக் கூடாது. அல்லது கலைஞரின் குடும்பத்திலிருந்து கழகத்தை பிடுங்கி குடும்பத்திற்கு அப்பாற்பட்டவர் தலைவராவது நலம் பயக்கும். வைகோவின் ம.தி மு க இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழக மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று தெளிவாகக் காட்டிவிட்டார்கள். வைகோ திமுகவின் தலைமை தாங்கி சீர்படுத்தட்டும். நெற்குப்பை தும்பி

Friday, 13 May 2011

14/05/2011

1. http://sengovi.blogspot.com/2011/05/blog-post_14.html
பாராளு மன்றத் தேர்தலில் வாக்கு குறைந்த போது, course correction போன்று, தம் மூன்று ஆண்டு ஆட்சியின் நடவடிக்கைகளை மறு நோக்கு செய்து, மின்சார வெட்டு முதலிய பிரச்னைகளுக்கு அணுகுமுறை மாற்றம், தாம் ஒய்வு எடுத்துக்கொண்டு இளைய தளபதிக்கு நாற்காலியை விட்டுக் கொடுத்து இருந்தால் கூட இந்த அளவுக்கு (அவையில் விஜயகாந்த் எதிர் கட்சித் தலைவர் ஆவதை காண்பது) அவமானம் ஆகி இருக்காது .
நாம் என்ன வேணாலும் செய்யலாம்; மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்கிற திமிர்/தெனாவட்டு க்கு சரியான ஆப்பு.
2. idlyvadai.blogspot.com
தி.மு.க மீது வளர்ந்து கொண்டிருந்த வெறுப்புக்கு last feather on the camel's back ஆக 2G spectrum வந்தது.
ஆனால் மக்களவையில் தி மு கவை தே மு தி கவை விட குறைவான இடங்களைப் பெரும் அளவுக்கு அமுக்கும் என்று எவரும் நினைக்கவில்லை. பண்ரூட்டி ராமச்சந்திரன் மட்டும் தான் மே மாதம் பதிமூன்றாம் தேதி ஜே முதல் அமைச்சாராகவும் , காப்டன் எதிர் கட்சித் தலைவராகவும் சந்திப்பர் என்று கோவையில் சொன்னார்; அது சரியாகப் போயிற்று. இட்லிவடை பதிவுக்கு பின்னூட்டம். 14 may 2011

Wednesday, 11 May 2011

12/05/2011

http://www.thamilnattu.com/2011/05/1.html

தமிழகத்து தமிழர்களுக்கு ஈழத்து பிரச்னைகள் தெரியாது, ஆனால் அவர்கள் இலங்கையில் சிங்களர் பெருவாரியான ஆட்சியின் கொடுமைகளை பேசுகிறார்கள் என்று பல முறை எண்ணியதுண்டு. ஈழம், மலை, கொழும்பு பிரிவுகள் பற்றியே ஓரளவு தெரியும். ஆனால் அங்கிருந்த சமூக பிரிவுகளைப் பற்றி படித்ததில்லை.
தமிழ் நாட்டுத் தமிழர்கள், அரசியல் கட்சிகளின் விடா முயற்சிகளையும் கடந்து சாதிப் பிரிவுகளை ஓரளவு குறைக்க வேண்டும், நீக்க வேண்டும் என்று சிந்திக்கிறார்கள். ஆனால், இலங்கையில் இந்த அளவுக்கு இருப்பது மிக வருத்தமாக இருக்கிறது. அன்னியர் (சிங்களவர் என்ற பொருளில்) அடக்கி வைத்துள்ளபோது, விடுதலைக்கு அல்லது தமிழர் உரிமைக்காக போராடும் காலத்தில் கூட இது போன்ற சமூக பிரிவுகள் மேலோங்கி நின்றது /நிற்பது அதிர்ச்சியே.
இது போன்ற பதிவுகளை, தமிழ் நாட்டு வலைஞர்கள் காணுவார்கள் என நம்புகிறேன்.
சாதி பிரிவு என்பது "வட நாட்டு பார்ப்பனர்கள் கொண்டு வந்த சகதி, சாதி பிரச்னைக்கு பார்ப்பனரே காரணம்" என்று இந்த நூற்றாண்டிலும் கத்திக் கொண்டிருக்கும் கலைஞர்களும் வலைஞர்களும் கண்டு, இங்குள்ள "பார்ப்பனர்" குறித்து தம் கண்ணோட்டத்தை
திருத்திக் கொள்வர் என நம்புகிறேன்.